ராகிங் தடுப்பு நடவடிக்கை இல்லை: திருச்சி ஐ.ஐ.எம்.,க்கு நோட்டீஸ்

புதுடில்லி: ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத நான்கு ஐ.ஐ.டி.,க்கள், மூன்று ஐ.ஐ.எம்.,கள் உட்பட 89 உயர் கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு எச்சரிக்கை விடுத்துஉள்ளது.

நம் நாட்டில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகளில் ராகிங் கொடுமையை தடுப்பதற்காக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு பல்கலை மானியக் குழுவால், 2009ல் வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டுதல்களை முறையாக செயல்படுத்தாத, 89 கல்வி நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு, பல்கலை மானியக் குழு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 17 நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

மும்பை, காரக்பூர், பாலக்காடு, ஹைதராபாதில் செயல்படும் ஐ.ஐ.டி.,க்கள், மும்பை, ரோஹ்தக், திருச்சியில் செயல்படும் ஐ.ஐ.எம்.,கள் ஆகியவை இதில் அடங்கும்.

Advertisement