பதவி உயர்விலும் 5 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும்; முன்னாள் படைவீரர்கள் எதிர்பார்ப்பு

மதுரை : 'மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவது போல முன்னாள் படைவீரர்களுக்கு பதவி உயர்விலும் 5 சதவீத ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் உள்ளது. ஆனால் பதவி உயர்வில் இல்லை. இதனால் அவர்கள் மற்றவர்களைப் போலவே பதவி உயர்வுக்காக காத்திருப்பர்.
அதேசமயம் அவர்கள் ராணுவத்தில் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பின்பு தமிழக அரசுப் பணிகளில் சேரும்போது குறைந்த ஆண்டுகளே பணியாற்றுவர். இதனால் பதவி உயர்வு எட்டாக்கனியாகி விடுகிறது. சம்பளமும் மற்றவர்களைப் போல அதிகம் கிடைப்பதில்லை. எனவே தங்களுக்கும் பதவி உயர்வில் குறிப்பிட்ட சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம் மதுரையில் நடந்தது. மாநில தலைவர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சின்னச்சாமி, கவுரவ ஆலோசகர் ரங்கநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஒற்றைக் கோரிக்கையாக 'இளமைப் பருவத்தில் நாட்டுக்காக பணியாற்றிவிட்டு, மீதியுள்ள குறைந்த காலங்களில் அரசு பணியில் சேர்வோருக்கு பதவி உயர்விலும் 5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுதொடர்பாக செல்லபாண்டி கூறுகையில், ''பணியில் மீதியுள்ள குறைவான ஆண்டுகளில் பதவி உயர்வுக்கு அதிக வாய்ப்பில்லை. எனவே பணியில் சேரும்போது ராணுவத்தில் வாங்கிய கடைசி மாத சம்பளத்தை மத்திய அரசு தருகிறது. அதனால் பதவி உயர்வு இல்லாவிடினும் சம்பள பாதுகாப்பு இருந்தது. தமிழக அரசில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலையில் சேரும்போதும், பதவி உயர்விலும் 4 சதவீத ஒதுக்கீடு உள்ளது. அதுபோல எங்களுக்கும் பதவி உயர்வின்போது 5 சதவீதம் வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.
மேலும்
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு
-
நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் திருப்பூரில் கைது; விற்பனைக்கு வைத்திருந்தது அம்பலம்
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'
-
பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
-
ஓமன் நோக்கி புறப்பட்ட எண்ணெய் கப்பலில் பற்றியது தீ; 14 இந்திய மாலுமிகள் மீட்பு
-
முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்கிறார் இ.பி.எஸ்.,!