இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் பலி: அறிவித்தது ஈரான்

3

டெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.


ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் தலையீயீட்டை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. இந்தத் தாக்குதலில் 610 பேர் உயிரிழந்ததாக ஈரான் கூறியிருந்தது.


இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 935 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்களில் 38 பேர் குழந்தைகள், 132 பேர் பெண்களும் உயிரிழந்துள்ளனர்.


அதேபோல் டெஹ்ரானின் எவின் சிறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 71 ல் இருந்து 79 ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

Advertisement