ராமநாதபுரம் தபால் நிலையத்தில் வெளிநாடு பார்சல் புக்கிங் சேவை

பரமக்குடி: ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்தில் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான பார்சல் புக்கிங் சேவையை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஏற்றுமதி பார்சல்களை தாங்களே ஆன்-லைனில் விவரங்கள் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.

ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் பார்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வசதி, புக்கிங் குறித்து விவரங்கள் ஆன்லைனிலேயே அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். ஒவ்வொரு நாடு, பொருட்களின் தன்மைக்கு ஏற்ப விலை நிர்ணயம் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலரை 94431 39982 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement