சின்னர், ரடுகானு அபாரம் * விம்பிள்டன் டென்னில் முன்னேற்றம்

லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் ஜான்னிக் சின்னர், 95வது இடத்திலுள்ள சக வீரர் லுகா நார்டியை சந்தித்தார். இதில் சின்னர் 6-4, 6-3, 6-0 என நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் டி மினார், 6-2, 6-2, 7-6 என ஸ்பெயினின் கார்பெல்லாசை வீழ்த்தினார்.
7வது இடத்திலுள்ள இத்தாலின் மசெட்டி, 2-6, 6-4, 5-7, 1-6 என தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய ஜார்ஜியாவின் நிக்கோலசிடம் ('நம்பர்-127') அதிர்ச்சி தோல்வியடைந்தார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, சக வீராங்கனை மிங்கே ஜுவை 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வென்றார். ஜப்பானின் ஒசாகா, 6-4, 7-6 என ஆஸ்திரேலியாவின் கிப்சனை சாய்த்தார்.
செக் குடியரசின் கிரெஜ்ஜிகோவா, பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலாவை சந்தித்தார். இதில் கிரெஜ்ஜிகோவா 3-6, 6-2, 6-1 என வெற்றி பெற்றார்.
பவ்லிசென்கோவா (ரஷ்யா), அனிசிமோவா (அமெரிக்கா), பாவோலினி (இத்தாலி), சினியகோவா (செக் குடியரசு), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கசட்கினா (ஆஸி.,) உள்ளிட்டோர் வெற்றி பெற்ற, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மேலும்
-
தொலைபேசி உரையாடல் கசிவு தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்
-
'வீடுதோறும் பிரசாரம்' அமைச்சர் மூர்த்தி தகவல்
-
தி.மு.க., அரசின் சாதனைகள் கூறி பிரசாரம் முன்னாள் அமைச்சர் பொன்முடி
-
'குமாரசாமி முதல்வரானால் பெண்களுக்கு ரூ.5,000'
-
நந்தி மலையில் இன்று நடக்கிறது சிறப்பு அமைச்சரவை கூட்டம்
-
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி