நடைபாதை ஆக்கிரமிப்பு: கொட்டிவாக்கத்தில் அகற்றம்

சென்னை: இ.சி.ஆரில் பாலவாக்கம், கொட்டிவாக்கத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரத்தில் நான்கு வழிச்சாலையை, ஆறு வழியாக மாற்றும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட வடிகால்வாய் மற்றும் நடைபாதை மீது ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. இதனால் பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், அடிக்கடி விபத்துகள் நடந்தன.
இதையடுத்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. போலீஸ் பாதுகாப்புடன், நேற்று கொட்டிவாக்கம், பாலவாக்கத்தில் நடைபாதை மீதிருந்த 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மீண்டும் நடைபாதை ஆக்கிரமித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என, போலீசார் அவர்களை எச்சரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!
-
கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 சீட்டுக்காக மவுனம்; செல்லுார் ராஜூ கிண்டல்
-
கலிபோர்னியாவில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: உள்ளே சிக்கிய 7 பேரை மீட்க முயற்சி தீவிரம்
-
விசாரணைக்கு அழைத்து வந்த வரை ஸ்டேஷனில் போலீசார் தாக்கிய வீடியோ: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 5 பேர் ஆயுதபடைக்கு மாற்றம்
-
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் 149வது ஆண்டு துவக்க விழா
-
3 சவரன் திருட்டு போலீஸ் விசாரணை
Advertisement
Advertisement