தீ விபத்தில் 3 கூரை வீடுகள் சேதம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏற்பட்ட, தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமானது.
விழுப்புரம் அருகே வளவனுார் அம்பேத்கர் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி நிர்மலா, 54; இவரது கூரை வீடு, நேற்று மதியம் 12:30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தொடர்ந்து அருகே இருந்த கருணாகரன் மகன் வசந்த், 23; சண்முகம் மனைவி அஞ்சலிதேவி, 43; ஆகியோரது வீடுகளிலும் தீ பரவியது.
அச்சமடைந்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜவேலு தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இதில் மூன்று வீடுகளும் எரிந்து, அதில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள், ரூ.10 ஆயிரம் எரிந்து சேதமடை ந்தது. இதுகுறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
மேலும்
-
உலக போலீஸ் விளையாட்டு போட்டி; பதக்கம் குவித்த இந்திய வீராங்கனை
-
டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!
-
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
-
அந்த நாள் ஞாபகம் வந்ததே; வயலில் இறங்கி நாற்று நட்ட உத்தரகண்ட் முதல்வர்
-
போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி