இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயார்!

காசா: '' இஸ்ரேலுடன் போரை நிறுத்துவது தொடர்பான திட்டத்துக்கு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளோம்,'' என ஹமாஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 21 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 நாட்கள் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் ஆலோசிக்கப்பட்ட வந்த நிலையில், அதற்கு நேர்மறையான பதிலை மத்தியஸ்தர்களிடம் கொடுத்துள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறை றித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.



மேலும்
-
ஹிமாச்சலில் 14 இடங்களில் மேகவெடிப்பு: ரூ.700 கோடி இழப்பு
-
வலுவான நிலையில் இந்தியா; கோலியின் சாதனையை முறியடித்த கில்!
-
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மக்களைக் கொல்ல விரும்புகிறார்: டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு
-
களைகட்டியது புரி ஜெகந்நாதர் கோவில் பஹூதா யாத்திரை; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
மனசாட்சி, பதவிப்பிரமாணம், சட்டத்துக்கு உண்மையாக இருக்கணும்: நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அறிவுரை
-
உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்: பட்னவிஸ் பதிலடி