அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில், அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று கடந்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நிறைவேற்றிய திட்டங்கள், மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ள திட்டங்களால் உருவாகிய வேலைவாய்ப்புகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போன்ற சாதனைகள் குறித்து, பொதுமக்களிடம் எடுத்துரைத்து, சாதனைகள் அடங்கிய துண்டு

பிரசுரங்களை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகர செயலாளர் கேசவன், அம்மா பேரவை தலைவர் தங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண் டனர்.

Advertisement