சாலையில் அடுத்தடுத்து கவிழ்ந்த வாகனங்கள்
ஓசூர், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், நேற்று மாலை, 4:30 மணிக்கு சென்ற கன்டெய்னர் லாரி, பிக்கப் வாகனம் ஆகியவை அடுத்தடுத்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.
இதில் அவ்வழியாக சென்ற காரும் விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணித்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய லாரி, சாலையோரம் கவிழ்ந்து கிடந்தது. கார் மற்றும் பிக்கப் வாகனம் சாலையில் நின்றதால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில், சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
Advertisement
Advertisement