மனைவி மாயம்; கணவர் புகார்

கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் சந்தியா, 24; கடந்த, 3ம் தேதி மதியம் மருத்துவமனைக்கு செல்வதாக வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப்பில் உள்ளது.


உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் கணவர் தினேஷ்குமார், 38, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement