சூதாடிய நால்வர் கைது

கோபி, கோபி அருகே இண்டியாம்பாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது சத்தியை சேர்ந்த முத்துசாமி, 65, ரமேஷ், 40, செந்தில்பாபு, 42, முனியன், 65, ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நான்கு பேரையும் கைது செய்து, 1,940 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement