காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கரூர், கரூர் அருகே, ரகசிய காதலியை கத்தியால் குத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 43; இவர், அதே பகுதியை சேர்ந்த, 46 வயது பெண்ணுடன் கடந்த, எட்டு ஆண்டுகளாக ரகசியமாக பழகி வந்தார். இந்நிலையில் கடந்த, 2ம் தேதி இரவு கோவிந்தராஜூக்கும்,
அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், பெண்ணின் தோள் பட்டையில் கத்தியால் குத்தினார். அதில், படுகாயமடைந்த பெண், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண் கொடுத்த புகார்படி, கோவிந்தராஜை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!
-
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்; விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அலட்சியம்
Advertisement
Advertisement