பம்மாய் அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
வாலாஜாபாத்:நத்தாநல்லுாரில், பம்மாய் அம்மன் கோவிலில் நேற்று, கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்திற்கு சொந்தமான பம்மாய் அம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் பம்மாய் அம்மனை கிராம தேவதையாக வழிபடுகின்றனர்.
இக்கோவிலில், நடப்பாண்டிற்கான ஆனி மாதம் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அப்பகுதியில் உள்ள வினாயகர், மாரியம்மன், எல்லையம்மன் கோவில்களில் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு கங்கையில் இருந்து எல்லை கரகம் புறப்பாட்டை தொடர்ந்து, அம்மன் குடம் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மதியம் 2:00 மணிக்கு பம்மாய் அம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புகார் அளிக்க சென்றவர் தாக்கப்பட்ட சம்பவம் வீட்டை காலி செய்யும்படி போலீஸ் நெருக்கடி
-
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி
-
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
-
ஓசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை அமைச்சருக்கு காங்., மாஜி எம்.எல்.ஏ., கேள்வி
-
பூக்கள் விலை உயர்வு
-
துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்
Advertisement
Advertisement