ஆபத்தான சாலை வளைவுக்கு தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு

கும்மிடிப்பூண்டி:ஆபத்தான சாலை வளைவு பகுதிகளில் தடுப்பு மற்றும் அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, சித்தராஜகண்டிகை கிராமத்திற்கு செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில், மூன்று இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன.
வாகன ஓட்டிகள் சற்று அசந்தாலும், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இச்சாலையில் வளைவுகள் இருப்பதற்கான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால், இரவு நேரத்தில், வாகன ஓட்டிகள் கவிழ்ந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை வளைவுகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும். வளைவுகள் இருப்பதற்கான, ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தீவிரம்: காச நோய் இல்லா கிராமங்களை கண்டறியும் பணி...தீவிரம்: பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை
-
குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
-
கோவிலில் திருடிய 2 பேர் கைது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு
-
தேங்காய் நாரில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்
-
7 பவுன் நகை திருட்டு
Advertisement
Advertisement