விண்வெளிக்கு அனுப்பிய 166 பேரின் அஸ்தி கடலில் மூழ்கியது
ஹூஸ்டன்: 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளுடன் விண்வெளிக்கு சென்ற விண்கலம் பூமிக்கு திரும்பும்போது பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, 'செலஸ்டிஸ்' என்ற விண்வெளி நிறுவனம், புதிய வகை சேவையை வழங்கி வருகிறது. உயிரிழந்தவர்கள் விண்வெளியில் பயணித்தது போன்ற ஒரு நினைவை உண்டாக்கும் வகையில், இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
இந்த நிறுவனமும், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த 'தி எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் பால்கன் - 9 ராக்கெட் வாயிலாக, 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளை அனுப்பின.
இந்த விண்கலம், கடந்த மாதம், 23ல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. திரும்பும் வழியில் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாகவும், அதை மீட்க முடியவில்லை என்றும் செலஸ்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
கோர்ட்டில் குட்டு வாங்கியும் திருந்தாத அதிகாரிகள்: பேனர் கலாசாரத்திற்கு விடிவுகாலம் தான் எப்போது?
-
இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்: மத்திய அரசுக்கு காங்., கேள்வி
-
மைக்கில் பேசினால் மன்னரா? ஆபாச பேச்சு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் கேள்வி
-
வாலாங்குளம் படகு இல்லத்துக்கு 'பூட்டு' அதிக கட்டண வசூல் ஆசைக்கு வேட்டு
-
விராட் கோலி-அனுஷ்கா புகைப்படங்கள் வைரல்: விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்தனர்
-
தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!