கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு
கடலுார் : கடலுார் கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்கள் அணிந்திருந்த நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி,80; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். அப்போது, கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் திருடு போனது.
இதேப் போன்று, சிதம்பரத்தைச் சேர்ந்த சரசு,65, என்பவர் அணிந்திருந்த 4 சவரன் செயினும் திருடுபோனது தெரிந்து. இருவரும் அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடு போன நகைகள் மதிப்பு 4.50 லட்சம் ரூபாய் ஆகும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் - அன்புமணி முடிவு
-
அரசியல் பரபரப்புக்கு இடையே டென்னிஸ் விளையாடிய முதல்வர்
-
போலீசார் தாக்குதல் மா.கம்யூ., கண்டனம்
-
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று பவுர்ணமி பூஜை
-
இன்று குரு பவுர்ணமி கொண்டாட்டம் வேதம் படிக்கும் மாணவர்கள் கவுரவிப்பு
-
தலைமை செயலர் பற்றி அவதுாறு பா.ஜ., ரவிகுமாருக்கு முன்ஜாமின்
Advertisement
Advertisement