பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

ஊத்துக்கோட்டை:முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக கட்டடம் பாசி படர்ந்து, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது.
எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள குளத்துமேடு பகுதியில், 2022ம் ஆண்டு 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
தற்போது, பராமரிப்பு இல்லாததால், இந்த கட்டடத்திற்கு வரும் மின் இணைப்பு கம்பி தொங்கியபடி உள்ளது.
தண்ணீர் தொட்டியில் இருந்து ஒழுகும் தண்ணீரால், கட்டடம் முழுதும் பாசி படர்ந்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் கட்டடம் சேதமடையும் நிலைமை உள்ளது.
எனவே, எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகள், கன்னிகைப்பேர் சுகாதார வளாகத்தை ஆய்வு செய்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
Advertisement
Advertisement