ரயில்வே மேம்பால பகுதியை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி:எளாவூர் ரயில்வே மேம்பாலத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் வழியாக எளாவூர், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், ராக்கம்பாளையம், மேலகழனி உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
எளாவூர் பகுதியில் மேம்பாலம் துவங்கும் இடத்தில், சாலையை ஆக்கிரமித்து எப்போதும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சில வாகனங்கள் மாத கணக்கில் நிறுத்தப்பட்டுஉள்ளன.
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஆரம்பாக்கம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்க வேண்டும்.
மேலும், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதை மீறி வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி