மக்களிடம் கனிவுடன் பேசுங்கள் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., பாடம்
திருவொற்றியூர்,
'அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவுடன் பேசி, கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும்' என, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் அறிவுறுத்தினார்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், 13 துறைகளின், 43 சேவைகளை எளிதாக பெறுவது குறித்த ஆலோசனைக்கூட்டம், நேற்று காலை, மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு தலைமையில் நடந்தது.
இதில், வடசென்னை எம்.பி., கலாநிதி, மாதவரம் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., மாவட்ட செயலருமான சுதர்சனம், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சுதர்சனம் எம்.எல்.ஏ., பேசுகையில்,''பொதுமக்கள் கூறும் நிறைகுறைகள் குறித்து, அதிகாரிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கனிவுடன் பேசி, தீர்வுகள் குறித்து விபரிக்க வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்சிக்கு நிதி திரட்டவே புதிய திட்டங்கள் காங்., அரசு மீது தேஜஸ்வி சூர்யா காட்டம்
-
போக்குவரத்து விதிக்கு மரியாதை 'டெலிவரி' ஊழியர் மீது தாக்குதல்
-
ஒரே ஆண்டில் 44,766 யூனிட் ரத்தம் வீண் நோய் தொற்று இருப்பதால் பயன்படவில்லை
-
ரூ.2,000 லஞ்சத்துக்காக வேலையை இழந்த அதிகாரி
-
வன விலங்கு தாக்குதல் 5 ஆண்டில் 254 பேர் பலி
-
சிர்சி - குமட்டா நெடுஞ்சாலை தரம் உயர்த்தும் பணி மந்தம்
Advertisement
Advertisement