தெற்கு மேல்மாம்பட்டில் சாலை பணி துவக்கி வைப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டில் சாலை பணி துவங்கியது.

தெற்கு மேல்மாம்பட்டு செட்டியார் தெருவில் முதல்வரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை போடும் பணி துவங்கியது. இப்பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்,ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, முன்னாள் துணை சேர்மன் தேவகிஆடலரசன் , ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அன்பழகன், லோகேஸ்வரன், கிளைச் செயலாளர் லட்சுமணன், பிரபு, கண்ணன், முருகன், பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் குழு சந்தியா, அரசு ஒப்பந்ததாரர்கள் ராமச்சந்திரன், பாலசுப்ரமணியன், ஊராட்சி செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement