கிரேன் மோதி பெண் பலி

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அருகே கிரேன் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன், இவரது மனைவிபரமேஸ்வரி, 42; இவர் நேற்று மாலை 6.45 மணியளவில், தனது விவசாய நிலத்தில் இருந்து மாட்டிற்கு புல்லை தலையில் எடுத்துக்கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தார்.
அப்போது, கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து வில்லியனுார் நோக்கி வந்த கிரேன் எதிர்பாராத விதமாக பரமேஸ்வரி மீது மோதியது, இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரமேஸ்வரியின் தலையில் கிரேன் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி இறந்தார்.
தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் கிரேன் ஓட்டுநர் மேற்குவங்கம் பகுதியைச் சேர்ந்த சத்யரஞ்சன் தாஸ்30, என்பவரை கைது செய்தனர்.
மேலும்
-
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
-
வள்ளலாரின் புகழை தி.மு.க., திட்டமிட்டு மறைக்கிறது: வடலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி ஆவேசம்
-
சினிமாவில் சரி என்பதை அரசியலில் தவறு என்பதா?
-
'கைது செய்ய வேண்டும்': கிருஷ்ணசாமி
-
ரயில் விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு திருமாவளவன் உதவி
-
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்