ஸ்ரீரங்கா ஹைப்பர் மார்ட் செஞ்சியில் திறப்பு விழா

செஞ்சி : செஞ்சியில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஸ்ரீரங்கா டெக்ஸ்டைல் சார்பில் புதிதாக நேற்று ஸ்ரீரங்கா ஹைப்பர் மார்ட் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது.

விழாவில், தீக்ஷா, பிரணவ் வேலன் திறந்து வைத்தனர். உரிமையாளர்கள் இளையராஜா, நிவேதா வரவேற்றனர். தொழிலதிபர் மணிவண்ணன், வசந்தா முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். ஸ்ரீரங்கா வெங்கடேசன், ஈஸ்வரி முதல் விற்பனையை பெற்றுக் கொண்டனர். மோகன்ராஜ், வர்ஷினி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மஸ்தான் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.

ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ராஜா தேசிங் கல்வி அறக்கட்டளை தலைவர் பாபு, தொழிலதிபர் காமராஜ்.

வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், செயலாளர் பாலாஜி சுரேஷ், ஸ்ரீராம் ரங்கராஜ், பாலாஜி தனபால், ராமன், லட்சுமணன், பத்மநாபன், அரவிந்த் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

திறப்பு விழாவை முன்னிட்டு 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கி யவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இச்சலுகையை இன்றும், நாளையும் வழங்க உள்ளனர். மதியழகன், ஜெயந்தி நன்றி கூறினர்.

Advertisement