நகராட்சி ஊழியர் வீட்டில் நகை திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நகராட்சி அலுவலக ஊழியர் வீட்டில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந் தவர் சவுந்திரராஜன் மனைவி உமாமகேஸ்வரி, 40; திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகத்தில் கணக்கராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் உமா மகேஸ்வரி வீட்டிற்கு வேலை செய்ய 2 பெண்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், உமா மகேஸ்வரி வெளியே சென்று வந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, படுக்கை அறை செல்பிலிருந்த 5 அரை சவரன் நகையை காணவில்லை.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement