சங்கராபுரம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர்கள் இளையராஜா, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் முகமது கவுஸ் வரவேற்றார். பள்ளியில் 10 மற்றும் பிளஸ் ௨ மாணவர்களின் ஜூன் மாத தேர்ச்சி அறிக்கை குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Advertisement