ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; கடும் தண்டனை பெற்றுத்தர இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்: ''ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலாசனை கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் பேசியதாவது: ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படையினருக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படும் வழக்குகளில் நீதி கிடைக்க வேண்டும்.
ஆபத்து மிகுந்த போர்க்களங்களில் அமைதி காக்கும் பணி மேற்கொள்ளும் ஐ.நா., படையினரின் பணி, மிகுந்த சிக்கலானது. ஆனால், ஐ.நா., படையினர் தாக்கப்படும் குற்றங்களில், பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற தன்மை, சர்வதேச அமைதி காப்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது. குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது.
எனவே, ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவது நமது பொதுவான கடமை. உலகளாவிய ஐ.நா. அமைதி நடவடிக்கைகளின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் தான் நமது எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். இவ்வாறு அவர் பேசினார்.



மேலும்
-
சீரான மக்கள் தொகை கணக்கெடுப்பு: உறுதி அளித்தார் மணிப்பூர் கவர்னர்
-
லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம்
-
அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,: சொல்கிறார் திருமாவளவன்
-
குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்