நடைபாதை ஆக்கிரமிப்பு கொளத்துாரில் கணக்கெடுப்பு
கொளத்துார், ஜூலை 18-
கொளத்துாரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியுள்ளது.
கொளத்துார் பூம்புகார் நகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்படி, நடைபாதைகள் அழகுப்படுத்தப்பட்டன.
ஆனால் அந்த பகுதி வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் பூம்புகார் நகர் பிரதான சாலையில் நேற்று, கொளத்துார் தாலுகா நில அளவையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதை மற்றும் சாலைகளை அளவீடு செய்தனர்.
அளவீடு குறித்த விபரங்களை சரிபார்த்து, ஆக்கிரமிப்புகளை அடுத்த மாதம் அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடியுரிமைக்கு எதிரான உத்தரவு அமெரிக்க நீதிபதி முட்டுக்கட்டை
-
மேம்படுத்தப்பட்ட முன்பதிவு வசதி 'வந்தே பாரத்' ரயில்களுக்கு அறிமுகம்
-
த.வெ.க., கொடியில் உள்ள வர்ணத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு நடிகர் விஜய்க்கு 'நோட்டீஸ்'
-
ஐகோர்ட் உத்தரவில் ரகசிய ஓட்டெடுப்பு: பதவி இழந்தார் தி.மு.க., நகராட்சி தலைவி
-
பழனிசாமிக்கு ஓய்வு தரப்பட்டு விட்டது
-
பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பி இன்றும் வைத்திருக்கிறேன்: வைகோ..
Advertisement
Advertisement