ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனை



கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரகுமாரன்பட்டி, வீரவள்ளி, சிந்தலவாடி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினந்தோறும் நன்கு விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இதில், பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள்
அதிகளவில் வாங்கி
சென்றனர்.

Advertisement