சரக்கு வாகனம் கவிழ்ந்து பழங்குடியினர் மூவர் பலி வேலைக்கு சென்ற போது விபரீதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்து, அதில் பயணித்த பழங்குடியினர் மூவர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நவமலை பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட, 22 பேர், நேற்று காலை, 8:20 மணிக்கு, சரக்கு வாகனத்தில், நெகமம் காட்டம்பட்டிக்கு பி.ஏ.பி., கால்வாய் துார்வாரும் பணிக்காக சென்றனர்.

வாகனத்தை நவமலையைச் சேர்ந்த தேவபாலன், 23, என்பவர் ஓட்டினார்.

சின்னார்பதி அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென கவிழ்ந்ததில், நின்று கொண்டு பயணித்த அனைவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், ராணி, 45, என்பவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், திலகராஜ், 40, இறந்தார். காயமடைந்த, 20 பேரும் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பப்பட்டனர்.

ஆபத்தான் நிலையில் சாந்தி, 52, மணி, 40, மாங்கரை, 40, காளியம்மாள், 30, ராஜாத்தி, 28, சஞ்சய், 20 ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த, சஞ்சய் இறந்தார். படுகாயமடைந்த, மற்ற 19 பேர், பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

விபத்து குறித்து, ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வாகனத்தை ஓட்டியவருக்கு லைசென்ஸ் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

டிரைவர் தேவபாலன் கூறுகையில், ''வாகனத்தை இயக்கும் போது, திடீரென, 'ஸ்டியரிங் லாக்' ஆனதால் பிரச்னை ஏற்பட்டது. பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது,'' என்றார்.




@block_B@

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு




முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:ஆழியாறு, நவமலையை சேர்ந்த, 22 பேர் விபத்தில் காயமடைந்தனர். அதில், மூன்று பேர் இறந்த துயரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி நவமலை பழங்குடியின மக்கள் கூறுகையில், 'கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தாங்க. பாதிக்கப்பட்ட எங்களை, அரசு கை கொடுத்து துாக்கி விட வேண்டும். அரசே இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டால் நாங்கள் என்ன செய்வோம். அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என்றனர்.block_B
@block_B@

பொள்ளாச்சி நவமலை பழங்குடியின மக்கள் கூறுகையில், 'கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தாங்க. பாதிக்கப்பட்ட எங்களை, அரசு கை கொடுத்து துாக்கி விட வேண்டும். அரசே இப்படி பாரபட்சமாக நடந்து கொண்டால் நாங்கள் என்ன செய்வோம். அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என்றனர்.

block_B

Advertisement