குடிநீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
'
கலசப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு காட்டுப்புத்துாரை சேர்ந்தவர் பழனி, 30, விவசாயி. இவரது மனைவி பார்கவி, 28. இவர்களது மகன் முகிலன், 2. நேற்று முன்தினம் மாலை வீட்டின் வராண்டாவில் விளையாடிய குழந்தையை காணாமல் பெற்றோர் தேடினர்.
அப்போது அங்கு திறந்து கிடந்த நிலமட்ட குடிநீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பின், குழந்தையை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement