ஆசிய பாட்மின்டன்: இந்தியா வெற்றி

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
இந்தோனேஷியாவில், ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது.
கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு கேதர், ரெஷிகா ஜோடி 11-5 என இலங்கையின் கெனத், இசுரி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சா ரவாத் ஜோடி 11-9 என இலங்கையின் இசுரி, சிதுமி டி சில்வா ஜோடியை வென்றது.
பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா 11-7 என இலங்கையின் சிதுலி ரணசிங்கேவை வென்றார். ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இந்தியாவின் பிரனவ் ராம் 11-7 என இலங்கையின் திடாசாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ராஜுலு ராமு 11-9 என இலங்கையின் ரணித்மா லியனகேவை வென்றார்.
முடிவில் இந்திய அணி 110-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சந்திக்கிறது.
மேலும்
-
எஸ்.எஸ்.ஐ., மயங்கி விழுந்து பலி
-
வாதானுார் கோவில் திருப்பணி துவக்கம்
-
போலி சிம்கார்டு பெற்ற வழக்கில்மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு
-
காமராஜர் இறந்த வீடியோவை பார்த்தால் கருணாநிதி மரியாதை வைத்தது தெரியும் சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி
-
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
-
மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர்