10ம் வகுப்பு மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை
திருநெல்வேலி; எப்போதும் அலைபேசி பார்த்துக் கொண்டிருக்காதே என தாயார் திட்டியதால் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் 10ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பத்தமடை அம்பேத்கர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் தாஸ். பெயிண்டர். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களது மகள் இஹாஷினி 15. அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் வீட்டில் இருந்த போது அதிக நேரம் அலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்தார். தாயார் இதனை கண்டித்தார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய இஹாஷினியை காணவில்லை. நேற்று காலை அதே தெருவில் உள்ள ஒரு கிணற்றில் சீருடையுடன் இஹாசினி உடல் மிதந்தது. அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பத்தமடை போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்.,ல் 11,000 மரங்களை வெட்டும் திட்டம் மெட்ரோவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
-
'தினமலர்' நிறுவனருக்கு நினைவஞ்சலி தங்கவயல் தமிழ் சங்கத்தினர் புகழாரம்
-
'ராகிங்' பீதியால் கல்லுாரி மாணவர் தற்கொலை
-
ஹூப்பள்ளி - ஜோக் நீர்வீழ்ச்சி சுற்றுலா பஸ் இனி ஞாயிற்று கிழமையும் புறப்படும்
-
சித்தராமையாவே 'மாஸ் லீடர்'
-
கோவில் கட்டும் இடத்தை சுட்டிக்காட்டிய பசு - புலி
Advertisement
Advertisement