மனைவி மாயம் கணவர் புகார்

அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அரியாங்குப்பம், கண்ணம்மா தோட்டத்தை சேர்ந்தவர் செங்கதிர் மனைவி மீனா, 43; மனநிலை பாதிக்கப்பட்ட இவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. இவரது குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், அரியாங்குப்பம் ஏ.எஸ்.ஐ., சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement