சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல் : துபாயில் இருந்து கடத்தி வந்த தம்பதி கைது

சூரத்: பேஸ்ட் வடிவத்திலான 28 கிலோ தங்கத்தை உடலில் மறைத்துக் கட்டி, துபாயில் இருந்து கடத்தி வந்த குஜராத் தம்பதியை, சூரத் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா ஐஎக்ஸ்-174 விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு தம்பதி மீது சந்தேகமடைந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர், அவர்களை சோதனையிட்டனர்.
தம்பதியரை சோதித்ததில் அவர்களின் உடல்பகுதியில் நடுப்பகுதி மற்றும் மேல் உடல்பகுதிகளில் மொத்தம் 28 கிலோ தங்க பேஸ்ட் மறைத்து கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் அந்த ஆணிடம் 12 கிலோ தங்கமும், பெண்ணிடமிருந்து 16 கிலோ தங்கமும் இருந்தது.
மொத்தம் 28 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் குஜராத்தை சேரந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சூரத் விமான நிலைய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய தங்க கடத்தலாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (6)
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
22 ஜூலை,2025 - 20:51 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
22 ஜூலை,2025 - 20:21 Report Abuse

0
0
Reply
Mario - London,இந்தியா
22 ஜூலை,2025 - 18:22 Report Abuse

0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
22 ஜூலை,2025 - 20:41Report Abuse

0
0
Reply
aaR Kay - Madurai,இந்தியா
22 ஜூலை,2025 - 16:15 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சைபர் மோசடியில் ரூ.22,845 கோடியை இழந்த இந்தியர்கள்!
-
ரூ.101 கோடி பண மோசடி: பீஹாரில் வங்கி அதிகாரி கைது
-
அயர்லாந்தில் இந்தியர் மீது தாக்குதல்: மர்ம நபர்கள் அட்டூழியம்
-
ஜூலை 25ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி அறிவிப்பு
-
பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை
-
சர்வதேச அளவில் திருப்பதி கோவில்: விரிவாக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு
Advertisement
Advertisement