மரத்தில் ஏறியபோது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி

நங்கவள்ளி, இடைப்பாடி அருகே பக்கநாட்டை சேர்ந்தவர் பூச்சி, 30. கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், நங்கவள்ளி சன்னியாசிமுனியப்பன் கோவில் அருகே மாந்தோப்பில் தேன் கூட்டை அழிக்க மரத்தில் ஏறினார்.


அப்போது மரக்கிளை முறிந்ததில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். நங்கவள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement