குட்கா பறிமுதல் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அங்குள்ள கடை ஒன்றில், 2 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டது.

கடை நடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் பிரதான், 29, திலிப் தாஸ், 29, ஆகியோரை கைது செய்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement