திருத்தணி கோவிலில் ரூ.1.71 கோடி வசூல்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், 1.71 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை உண்டியல்களில் செலுத்துகின்றனர்.

கடந்த 23 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் ஊழியர்கள் எண்ணினர்.

இதில், 1 கோடியே, 71 லட்சத்து, 32 ஆயிரத்து, 719 ரூபாய், 649 கிராம் தங்கம், 14 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தன.

Advertisement