போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமையையொட்டி, இன்று (26ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

அதன்படி, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கி, பொது மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இதேபோல், தன்வந்திரி போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையிலும், திருக்கனுார், பாகூர் போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி.,க்கள் தலைமையிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement