குட்கா விற்றவர் கைது
ப.வேலுார்: பரமத்தி அருகே, புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கடைகளில் குட்கா பொருட்களை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பரமத்தி எஸ்.ஐ., பொன்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழு, புலவர்பாளையத்தில் உள்ள டீ, மளிகை கடை, பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் பின்புறம் உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருடகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் ராமசாமி, 62 கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமி-ழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடை-களில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி எச்சரிக்கை விடுத்-துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை
-
கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் அரசு பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
-
மாயனுார் காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வரத்து: மக்களுக்கு எச்சரிக்கை
-
சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்
Advertisement
Advertisement