ரூ.25 லட்சம் நிவாரணத்திற்கு அரசு மவுனம்
சிவகங்கை:மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை 29, விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் தாக்கி இறந்த வழக்கில் ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசிடமிருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் 29. இவர், பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த 9.5 பவுன் நகையை திருடியதாக கூறி, மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோகித்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
ஜூலை 3 ம் தேதி நடந்த விசாரணையில் அரசு தரப்பில் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம், 3 சென்ட் இலவச பட்டா, அஜித்குமார் தம்பி நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவினில் வேலை தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 22 ல் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அஜித்குமாருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள், அரசு இழப்பீடாக ரூ.50 லட்சம் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த இடைக்கால நிவாரணமாக அரசு ரூ.25 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால் அரசு தரப்பில் இருந்து இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்