கோபியில் இன்று முதல் 2 நாள் மகளிர் குழு பொருள் விற்பனை
ஈரோடு, ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ், மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் இன்றும் (31), நாளையும் (ஆக., 1) கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லுாரியில் (தன்னாட்சி) கல்லுாரி சந்தை நடக்க உள்ளது.
மகளிர் குழுவினர் தயாரித்த கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டு புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, டிசைன் மிதியடிகள், பேன்சி பொருட்கள், காட்டன் பை, சணல் பை, மரச்செக்கு எண்ணெய், மரச்சாமான்கள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை தட்டு, உணவு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. கல்லுாரி மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மகளிர் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி பயன் பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிகிறது: மியான்மரில் தேர்தல் நடத்த திட்டம்
-
கன்னியாகுமரியில் ஓய்வுபெற்ற நாளில் ஓடியே வீட்டுக்கு வந்த எஸ்எஸ்ஐ
-
உலக விளையாட்டு செய்திகள்
-
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் 'சஸ்பெண்ட்'
-
முன்னிலை பெற்றது நியூசிலாந்து: கான்வே, மிட்செல் அரைசதம்
-
பிரான்ஸ் வீரர் 'தங்கம்': உலக நீச்சல் போட்டியில்
Advertisement
Advertisement