சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பெருக்கு விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வணிகர் நலச் சங்கம் சார்பில் ஆடிப்பெருக்கையொட்டி அன்னதான விழா நடைபெற்றது.
நேற்று காலை 11:00 மணிக்கு சித்தருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க மலைபோல் குவிக்கப்பட்டு வைத்திருந்த அன்னத்தில் வேல் பிரதிஷ்டை செய்தனர். இதில் சிங்கம்புணரி வணிக நலச்சங்க நிர்வாகிகள், வாரிசுதாரர்கள், பூஜகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவின் நிறைவு நாளையொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது. பாரதி நகர் நொண்டி கருப்பர் கோயிலில் ஆடி பெருக்கு விழா அன்னதானம் நடந்தது.
/
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆன்லைன் டிரேடிங் செயலி; ரூ.50 லட்சம் நஷ்டம் மேலாளர் தற்கொலை
-
அரியலுார் அருகே பாலம் பக்கவாட்டு சுவர் சரிந்து போக்குவரத்து பாதிப்பு
-
வக்கீல் வீட்டில் ரூ.50 லட்சம் 50 சவரன் திருட்டு
-
ராணுவ சரக்கு விமானம் ஒப்படைத்தது 'ஏர்பஸ்'
-
வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 குழந்தைகள் பலி
Advertisement
Advertisement