ஊருணியில் பஸ் ஸ்டாண்ட் உயர்நீதிமன்றம் தடை
மதுரை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருணாச்சலம், சுவாமிநாதன், சோமசுந்தரம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் பழமையானது. நெரிசலால் அதை அகற்றி விட்டு, தினசரி மார்க்கெட்டினை இணைத்து அதே பகுதியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும். தற்காலிகமாக நகர சிவன் கோயில் ஊருணி பகுதியில் ஆக.8 முதல் பஸ் ஸ்டாண்ட் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஊருணி மாசுபடும். மக்களுக்கு இடையூறு ஏற்படும். அங்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. சிவன் கோயில் ஊருணி பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மாற்று இடம் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார். கோயில் ஊருணி பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
ஆசிய சர்பிங் போட்டியில் அசத்தும் வீராங்கனைகள்...
-
மும்பையில் நெட்வொர்க் பிரச்னை : ஏர் இந்தியா விமான விமான சேவை பாதிப்பு
-
சின்சினாட்டி டென்னிஸ்: கார்சியா வெற்றி
-
ஆக., 15ல் புடினை சந்திக்கிறார் டிரம்ப்; உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்காது என்கிறார் ஜெலென்ஸ்கி
-
காஷ்மீருக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை ; பிரதமர் பெருமிதம்
-
தேர்தல் வெற்றிக்காக தரப்படும் இலவசங்கள்: யோசித்து செயல்பட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை