கட்டிக்குளம் கோயிலில் நாளை அவதார விழா

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் நாளை ஆடி பூராட நட்சத்திரத்தை முன்னிட்டு கருப்பனேந்தல் மட தவச்சாலையில் அதிகாலை சுவாமிக்கு அபிஷேக,ஆராதனை, பூஜை நடைபெற உள்ளது.

இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதி உலா, கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement