திருகோவிலுாருக்கு வரும் 29ம் தேதி பழனிசாமி வருகை : மாவட்ட செயலாளர் குமரகுரு தகவல்

திருக்கோவிலுார்: அ.தி.மு.க., தொகுதி பூ த் கமிட்டி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் 29ம் தேதி எதிர்க்கட்சித் த லைவர் பழனிசாமி திருக் கோவிலுார் வர உள்ளதாக மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்தார்.

திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் தொகுதிகளை உள்ளடக்கிய 520 பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கி, வெற்றி வியூகம் குறித்த ஆலோசனை கூட்டம் திருக்கோவிலுாரில் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி பங்கேற்கிறார். இதற்காக 126 அடி உயர கொடிக்கம்பம், விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் கால் கோள் விழா சந்தப்பேட்டை, கீரனுார் புறவழிச் சாலையில் நேற்று நடந்தது.

மாவட்ட செயலாளர் குமரகுரு நிருபர்களிடம் கூறியதாவது;

எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனைக வழங்கி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்திக்க வரும் 29ம் தேதி பழனிசாமி வருகிறார்.

அப்போது, 126 அடி உயர கொடி ஏற்றி தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார்.

நகர செயலாளர் சுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஒன்றிய செயலாளர்கள் பழனி, சந்தோஷ், பழனிச்சாமி, இளங்கோவன், முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, தொழிலதிபர் பிரபுசிவராஜ், முன்னாள் நகர செயலாளர் இளவரசன், நகர பொருளாளர் ஷபி, நகர மன்ற கவுன்சிலர்கள் ரகு, வினோத், பிரைமதி ஏழுமலை, சீனிவாசன், பார்த்திபன், சுபாஷ், சிவா, சின்னத்தம்பி, ஏசுபாதம், கண்ணன், பாலாஜி, சதீஷ்பாண்டியன், ஆதன்ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement