நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, 8 பேர் காயம்

நியூயார்க்: நியூயார்க்கில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் இன்று காலை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது தொடர்பாக நியூயார்க் சிட்டி போலீசார் கூறியதாவது; ப்ரூக்லைன் பகுதியில் உள்ள உணவகத்தின் உள்ளே இன்று (ஆக.,17) அதிகாலை 3.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், 27 மற்றும் 35 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3வது நபரின் வயது குறித்த தகவல் தெரியவில்லை. இதுவரையில் குற்றவாளி யார் என்று அடையாளம் காணப்படாததால், கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.
சம்பவ இடத்தில் 36 தோட்டாக்களின் உறைகள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேர் பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது, துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, எனக் கூறினர்.
வாசகர் கருத்து (2)
தென்காசி ராஜா ராஜா - ,
17 ஆக்,2025 - 18:41 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
17 ஆக்,2025 - 18:19 Report Abuse

0
0
Reply
மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு பட்டியலில் 8 பேர்; முக்கிய அறிவிப்பை வெளியிடும் பாஜ
-
அமலாக்கத்துறைக்கு பதில் தேர்தல் ஆணையம்; மத்திய அரசு மீது தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
-
உக்ரைனின் 300 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா; ஏவுகணை கிடங்கும் தாக்கி அழிப்பு
-
ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்கள்
-
குஜராத்தில் விபத்து; கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி
-
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!
Advertisement
Advertisement