தோல்வியை மூடி மறைக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம் ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு

கோவை: தோல்வியை மூடி மறைப்பதற்காகவே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடகம் நடத்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை எதிர்த்து செயல்பட கூடிய வகையில் எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை தான் தற்போது காங்கிரஸ் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் என்பது இந்திய மக்களுக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, நல்ல அரசை, மக்கள் விரும்பும் அரசை, மக்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு நடுநிலையான ஆணையம். அத்தகைய தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து குற்றம் கூறி, ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைத்து காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் செயல்படுத்த தொடங்கினால், அதன் உள்ளர்த்தம் நடைபெறுகின்ற சட்டசபை தேர்தலில் தெரியும்.
காங்கிரஸ் கூட்டணி மிக மிக பலவீனமாக உள்ளது. தோல்வியை அவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள். அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகமாக இது நடக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என குற்றம் சாட்ட விரும்புகிறேன். இதனை சாதாரண வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு பட்டியலில் 8 பேர்; முக்கிய அறிவிப்பை வெளியிடும் பாஜ
-
அமலாக்கத்துறைக்கு பதில் தேர்தல் ஆணையம்; மத்திய அரசு மீது தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
-
உக்ரைனின் 300 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா; ஏவுகணை கிடங்கும் தாக்கி அழிப்பு
-
ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்கள்
-
குஜராத்தில் விபத்து; கார் மோதியதில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி
-
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!