ஜி.எஸ்.டி., அமைச்சர்கள் குழுக்களுடன் நிதியமைச்சர் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் நேற்று ஜி.எஸ்.டி., அமைச்சர்கள் குழுக்களை சந்தித்து, அரசின் வரி சீர்திருத்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது, இந்தியாவை தற்சார்புடைய நாடாக உருவாக்க இது வழிவகுக்கும் என்றும், வரும் வாரங்களில் மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். வரி சீர்திருத்தங்கள் குறித்து ஜி.எஸ்.டி., சீரமைப்பு, காப்பீடு வரி விதிப்பு மற்றும் இழப்பீடு செஸ் தொடர்பான மூன்று அமைச்சர்கள் குழு இன்றும் விவாதிக்கின்றன.

Advertisement