ஆசிய மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் நீரு தண்டா

ஷிம்கென்ட்: ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று அசத்தி உள்ளார்.
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் டிராப் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் நீரு 43 புள்ளிகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். 37 புள்ளிகள் எடுத்த கத்தாரின் பாசில் ரே மற்றும் 29 புள்ளிகள் எடுத்த ஆஷிமா ஆகியோரை முந்தி தங்கம் வென்றார்.
நீரு தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால், போட்டியில் வலுவான முன்னிலை வகித்து தங்கம் வென்றார். நீரு தண்டாவின் இந்த வெற்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இந்திய துப்பாக்கி சுடும் அணிக்கும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்த வெற்றி ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி பட்டியலில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. நாட்டின் மற்ற துப்பாக்கி சுடும் வீரர்களும் இந்த சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், இதன் காரணமாக இந்தியா பதக்கப் பட்டியலில் தனது நல்ல நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
