தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலி
குமாரபாளையம் குமாரபாளையம் அருகே, குள்ளநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னுசாமி, 44; மரம் ஏறும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், நேற்று காலை சின்னுசாமி இறந்தார். அவரது மனைவி சுமதி, 43, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை பெற்றோர்கள் கோரிக்கை
-
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து டாக்டர் பணியிடம் காலி அதிகாரிகள் கவனிப்பார்களா?
-
ஆக்கிரமிப்பு வேலியை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் திருவாலவாய நல்லுாரில் தர்ணா போராட்டம்
-
பழனிசாமியை வரவேற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள்
-
உயிர்களை காவு வாங்கும் குவாரி குட்டைகள் கண்டும் காணாமலும் அதிகாரிகள்
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Advertisement
Advertisement